ரஜினி பஸ் டிப்போவுக்கு விசிட்… கண்டக்டர் வாழ்க்கை !
இமயமலை சென்று வந்த ரஜினிகாந்த், படக்குழுவினருடன் ஜெயிலர் வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் ஆரம்ப காலத்தில் தான் பணியாற்றிய 4வது பணிமனைக்கு சென்று பார்வை யிட்டார்.
0 notes
சென்னையில் ரஜினி திரைப்படம் விழா...
சென்னையில் ரஜினிகாந்தை கவுரவிக்கும் திரைப்பட விழா நடக்கிறது. ‘ரஜினிசியன்’ என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவை பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் நடத்துகின்றன. இந்த விழாவில் காலா, பாபா, 2.ஓ, சிவாஜி, முத்து, தர்பார் படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், பிவிஆர், பிளாசோ, லக்ஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த படங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்,…
View On WordPress
0 notes
(இரண்டாவது அலை கொரோனா வந்து நான் மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது நடந்தது….)
“சூனா பானாவின் களை கட்டும் கச்சேரி”
கடந்த வாரம் மருத்துவமனையில் நாங்கள் அட்மிட் ஆனபோது எங்கள் வீட்டு உறுப்பினர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் தான் கொரோனா வார்டில் இருந்தோம்! அடுத்த 4 நாட்களில் மேலும் 10 பேர் வர எங்களுக்கு தனி ஆஸ்பத்திரியே ஒதுக்கப்பட்டது. இதோ இன்று 7 ஆவது நாள்! ஆஸ்பத்திரி நிரம்பி வழிகிறது! வந்தவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல மூச்சிரைத்துக் கொண்டும்..
இருமிக் கொண்டும் இருக்கிறார்கள்! மூச்சிரைப்பில் குட்டி பொமரேனியன் நாய் இளைப்பது, அடுப்பில் ஊதாங்குழல் ஊதுவது, சைக்கிளுக்கு காற்றடிப்பது போல மூச்சு விடுவது, பம்ப் ஸ்டவ்வை அடித்தது போல சப்தம், யாராவது நம்மை விரட்டினால் ஓடி வந்து இளைத்து மூச்சு வாங்குவது என பல தினுசுகளில் மூச்சிரைப்புகள். ஒருவர் அற்புதமாக மூக்கில் விசிலே அடித்து கச்சேரி நடத்தினார்.
மூச்சிரைப்பு ஒரு ரகம் என்றால் இருமல் இன்னும் கொடுமை! ரத்த வாந்தி எடுக்கும் வசந்த மாளிகை சிவாஜி லெவலில் ஆரம்பித்து மணிரத்னம் படத்து நாசூக்கு இருமல் வரை பல டெசிபல்களில் வித விதமான இருமல்கள்! அவ்வொலிகளில் சில காதை ரணமாக்கும். தகர டப்பாவில் சல்லி கற்களை போட்டு குலுக்குவது, களிமண் தரையை தக் தக்கென மம்மட்டியால் கொத்துவது, உண்டியலில்..
சில்லறை குலுங்கும் சப்தம், மரக்கதவை உலக்கையால் குத்தும் சப்தம் இப்படி வெரைட்டியாக பற்பல இருமல்கள். முதலில் கொஞ்சம் தைரியமாக இருந்த எனக்கு சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவிடம் கேட்டது போல முருகேஷா இதை நான் கேட்டேனா லெவலுக்கு அதுவாக காதில் வந்து விழுந்து அட்மாஸ்”fearரை” உண்டாக்கியது! என்னடா தைரியமா மூஞ்சை வச்ச்சிகிட்டு வெளியே வீராப்பா..
தீப்பொறி திருமுகம் கணக்கா இந்த ஆறுமுகம் இருக்கிறது உனக்கே பொறுக்கலையா! என ஒரு கணம் அப்பன் முருகனிடம் வேண்டி கண்ணீர் உகுத்தேன்! 2ஆவது அலை இன்னும் க்யூர் ஆகலை இந்த கச்சேரிகளுக்கு நடுவே தான் இன்னும் 1 வாரம் நீ இருக்கணுமுன்னு கந்தன் அருளிவிட, இப்போது இந்த சத்தங்களுக்குத் தயாராகிட்டேன்! சைக்கிள் பம்பு மூச்சா அது வேணியம்மா..
வசந்தமாளிகை இருமலா அது கல்குறிச்சி துரைச்சாமி, உண்டியல் ச���ல்லறையா அது பந்தல்குடி பாண்டியன்னு மனப்பாடம் பண்ணியாச்சு இன்று காலை நான் எழுந்தபோது என் அறை வாசலில் ஒரு கூட்டம் என்னாச்சுங்க என்றேன் நைட்டு உங்க ரூமில் ரெண்டு பூனை கத்திச்சுங்க புதுசா இருந்தது என்றனர் பீதியுடன்! அந்த பூனை சத்தம் நான் மூச்சிரைச்சது தான்னு எனக்கு மட்டுமே தெரியும்!
ஆனா இன்னிக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே! விடு விடு யானை சைசில் இருந்துகிட்டு பூனை சத்தம் தானே கொடுக்கிறேன்னு சமாளிப்போம்! சுனா பானா இதை இப்படியே மெயிண்டைண்ட் பண்ணிக்கோ.. உன்னைய யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது! ஆங்! போ.. போ.. போ.. கூட்டம் போடாதே! ஓரமா போ புரியுதா!
0 notes
கெஸ்ட் ரோல்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே.. பொங்கும் ரசிகர்கள் !
மிகவும் குறைவான படங்களில் மட்டுமே ஒரு காட்சியில் வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். யார் படத்தில் உலக நன்மைக்காக ஸ்ரீராகவேந்திரா சாமியை பிரார்த்திப்பது போல ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
பாலச்சந்தர் கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினியுடன் ஒரு பாடலில் கொஞ்ச நேரம் வந்து நடனமாடி யிருப்பார்.
அதன் பின் அவர் கதை எழுதி தயாரித்த வள்ளி படத்தில் ச��ல காட்சிகளில் வருவார். பி.வாசு இயக்கத்தில் உருவான குசேலன் படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோல் என சொல்லப்பட்டது.
0 notes
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டு கொள்ளையில் ரஜினி மகள் வீட்டில் திருடிய கார் ஓட்டுநருக்கு தொடர்பா? - போலீஸ் விசாரணையில் புது தகவல்
சென்னை: சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள வீட்டில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டு லாக்கரிலிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடு போனது.இதுகுறித்து, தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டிலிருந்து 200…
View On WordPress
1 note
·
View note
ஜன(ரஞ்ச)கராஜ்...
#தனியொருவன்
நடுநடுங்கும்குரல் அப்படியே உச்சஸ்தாதியில் ஏறி அப்படியே அமுங்கும் மாடுலேஷன், மிமிக்ரி கலைஞர்களுக்கு இந்த வாய்ஸ் ஒரு செ(வெ)ல்லம்.. அந்த காலத்தில் இந்தக் குரலுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ஒவ்வொரு மிமிக்ரி கலைஞனுக்கும் மிகப் பெரிய அங்கீகாரம்! “ ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ்..
சினிமாவிற்குள் நுழைந்த நடிகன், ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன், நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார் ஜனகராஜ்! அப்படியே இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் கிடைத்தது, உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார்! ஆனால் நீ நடி அதுதான் உனக்கு..
சரிவரும் என்று பாரதிராஜா சொல்லி நடிக்க வைத்தார், இவரை அரவணைத்த இயக்குனர் பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார்! முதலில் மிகப் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்காலங்களில் முக்கிய காரக்டர் தந்திருப்பார் பாரதிராஜா, காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவராக நடித்திருப்பார்.
ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா! கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ்..
சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த 7பேரையும் 80களில் 7ஸ்டார்ஸ் என்பார்கள், இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதி ராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே ஒரு பாத்திரம்..
அவர்கள் கதையில் இருக்கும், மணிரத்னத்தின் நாயகன், அக்னிநட்சத்திரம், ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது.. தங்காச்சிய நாய் கட்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்ஷாகாரனாக இருந்து பணக்காரனாக நடிக்க வந்து சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதிராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..
அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சீரியசான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் பை சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை படங்கள்! அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த இன்ஸ்பெக்டர் காரெக்டர்,
நாயகனில் கமலின் உயிர் நண்பன் செல்வம், மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ், திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்யராஜுடன் கவுண்டமணிக்கு முன்பாக பல படங்கள், பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என..
தன்னையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில் ஊட்டிக்கு போகாதிங்க.. என கத்தும் பைத்தியமாக, கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் கன்னிராசி..
இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார். இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே.. இவரை காமெடி நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது அருமையான குணசித்திர நடிகரும் கூட! ஆரம்ப காலத்தில் பாலைவனச்சோலை படத்தில்..
வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே அது தெரியும்! ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவர் படங்களில் செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் நிச்சயம் ஜனகராஜ் இருப்பார்! கன்னிராசியில் பாட்டு வாத்தியார், ஆண்பாவத்தில்ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..
நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் பாண்டியராஜனின் அப்பா என தூள் கிளப்பியிருப்பார். கே.பாலச்சந்தர் பட��்களிலும் அவர் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும்..
புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர்!அதுவும் அவர் என்றோ கற்ற வயலின் கலைஞராக! இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.! இருவரும் அந்தளவு நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம்! கவுண்டமணி செந்திலை விட அதிகப் பாடல்களில் நடித்தவர்..
ஜனகராஜாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன் ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்கள் அந்தப் படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என விவாதித்தது உண்டு, அந்த அளவிற்கு சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ்! அவருக்கு பட வாய்ப்புகள் குறைவினால்..
அவர் இவருக்காக அதிகம் பாடியதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததும், இதயத்தாமரையில் வரும் ஞாபமறதி கேரக்டரும், நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர..
நடிப்பிற்கு சான்றாகும்! கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய காலத்தில் எல்லா கதாநாயகர்களுடனும் தவிர்க்க முடியாத நடிகனாக சிறந்து விளங்கியது ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டு தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில்..
ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார்! உண்மையில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது ஜனகராஜிற்கு தான் பொருந்தும்.. தமிழ்சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்! இவரை இன்றைய தொலைக் காட்சி முதல் பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்! இந்த முகனூல் காலத்தில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள்..
கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்சில் இந்த டிஜிட்டல் உலகிலும் தனியொருவன் ஜனகராஜ் ஒருவர் மட்டுமே!
1 note
·
View note