இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !
நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார் நிச்சயதார்த்தம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப் போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மும்பையில் Art Gallery வைத்து நடத்தி வரும் நிக்கோலய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம்.
0 notes
பெண்ணின் உடலில் 300 சிறுநீரகக் கற்கள்... காரணம் அவங்க குடிச்ச பபிள் டீ !
தைவானைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு, சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆரம்பத்தில் அந்த பெண் காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
டாக்டர்கள் கற்களை சிறிய வேக வைத்த பன்கள் என்று விவரித்ததாக இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கற்கள் 5 மிமீ முதல் 2 செமீ வரை அளவிடப் பட்டுள்ளன.
0 notes
மூன்று பேர் தொடங்கிய ரெட்பஸ் வளர்ச்சி மதிப்பு இன்று ரூ.6985 கோடி !
அதே போலத்தான் ரெட்பஸ் நிறுவனமமும். ஃபனிந்திர சாமா, சுதாகர் பசுபுனுரி, சரண் பத்மராஜு ஆகியோரால் ரெட்பஸ் என்ற ஆன்லைட் டிக்கெட் புக்கிங் நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இதைத் தொடங்கிய மூவரும் பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் படித்தவர்கள். ரெட்பஸ்ஸை தொடங்குவதற்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை பார்த்தனர்.
இந்த நிலையில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரெட் பஸ் நிறுவனத்தை தொடங்கினர். இப்போது அதன் சந்தை மதிப்பு ரூ.6985 கோடி ஆகும். ரெட்பஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு மூலகாரணம் ஃபனிந்திர சாமா.
0 notes
ஒரு வேலை சாப்பாட்டோடு உயிர் வாழ்ந்தேன்.. சமந்தா உருக்கம் !
பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.
சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி.
ஆனால் தான் பிறந்து வளர்ந்த தெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
0 notes
வாகனத்துக்கு பெட்ரோல் போடும் போது ரூ. 110, ரூ. 120- க்கு போட்டால் லாபமா?
ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா என்பது குறித்து பார்க்கலாம்…
கார், பைக் என எதுவாக இருந்தாலும், வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் போது, ரூ.100க்கு பதிலாக 110 அல்லது 120 என்ற அளவில் பொதுமக்கள் சிலர் எரிபொருளை எடுத்துக் கொள்வார்கள்.
இதன் மூலம் எரிபொருள் திருடப்படுவது தடுக்கப் படுவதாகவும், சரியான அளவில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.
0 notes
காதலியை வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூர வியாபாரி !
இந்த நிலையில் இவருக்கும் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி யாரும் இல்லாத அனாதை என்பதால் அவருக்கு மனோஜ் ஆறுதலாக இருந்து வந்தார்.
2 பேருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும் அதையும் மீறி அவர்களுக்குள் இடையே கள்ளக்காதல் உருவானது. தினமும் தனியாக சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்தனர்.
பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மீராரோடு கீதா நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 7- வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
0 notes
போதை தலைக்கேறி உல்லாசம்.. கிறங்கிய விருந்தாளி.. போதை காளான் !
இவரது அப்பா - அம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அவர்கள் 2 பேருமே தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
எனவே, ஆகாஷ் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வருகிறார். பாட்டி வீட்டு பக்கத்தில் வசித்து வருபவர் ரிதி ஏஞ்சல். 19 வயதாகிறது. இவர் ஆகாஷூடன் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்தவர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் ஏஞ்சலின் வீடு உள்ளது. பள்ளியில் ஏற்பட்ட இவர்களின் நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது. ஸ்கூல் முடித்ததுமே, நீலகிரியில் உள்ள ஒரு என்ஜினியரிங் காலேஜில் ஆகாஷ் சேர்ந்தார்.
0 notes
இழுவை படகுகளால் பெரிய கப்பல்களை எப்படி இழுக்க முடிகிறது? #Tug Boats
நமது சாலைகளில் ஏதேனும் கனரக வாகனம் பழுது ஏற்பட்டால் அல்லது சகதியில் புதைந்து அந்த வாகனத்தை வெளியில் எடுக்க முடியாமல் திணறும் போது நாம் டிராக்டர் மூலமாக அதனை இழுத்து வெளியில் கொண்டு வருவோம்.
கனரக வாகனம் என்பது பொதுவாக அளவில் பெரியதாக இருக்கும் அந்த பெரிய வாகனத்தை ட்ராக்டர் எனும் சிறிய வாகனம் மிகவும் எளிமையாக இழுத்து விடும்.
0 notes
கெஸ்ட் ரோல்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே.. பொங்கும் ரசிகர்கள் !
மிகவும் குறைவான படங்களில் மட்டுமே ஒரு காட்சியில் வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். யார் படத்தில் உலக நன்மைக்காக ஸ்ரீராகவேந்திரா சாமியை பிரார்த்திப்பது போல ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
பாலச்சந்தர் கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினியுடன் ஒரு பாடலில் கொஞ்ச நேரம் வந்து நடனமாடி யிருப்பார்.
அதன் பின் அவர் கதை எழுதி தயாரித்த வள்ளி படத்தில் சில காட்சிகளில் வருவார். பி.வாசு இயக்கத்தில் உருவான குசேலன் படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோல் என சொல்லப்பட்டது.
0 notes
மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் !
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவ ருக்கும் தெரியும்.
அதிலும் மற்ற எண்ணெய் களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன் களைப் பற்றி தெரியாது.
நமது முன்னோ ர்கள் சொல் வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகி றார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிட வில்லை.
0 notes
இதய இயக்கமும் இரத்த ஓட்டமும்.. விளக்கமாக அறிய !
ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான்.
உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை.
மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே. நாம் உட்கொண்ட உணவு உட்கொள்ளப் பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது.
0 notes
உணவில் அதிகம் தேங்காய் சேர்த்து கொள்வது நல்லதா?
இது நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
தேங்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேங்காய் அதிக கலோரிகள் கொண்டது. அதிகப்படியாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கக் கூடும். தேங்காயில் உள்ள கொழுப்பு LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கக் கூடும்.
0 notes
சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது ஏன் தெரியுமா?
இரப்பையில் உணவானது செரிமானம் செய்ய நொதிகள் சுரக்கிறது. செரிமான மண்டலம் செயல்படத் தொடங்குகிறது. மேலும் அச்சமயத்தில் இரத்த ஓட்டமும் இரப்பை பகுதிக்கு அதிகரிக்கிறது.
ஏனெனில் குடல் உறிஞ்சுகள் மூலம் நாம் சாப்பிட்ட உணவிலிருந்து சத்துகளை இரத்தமானது எடுத்துச் செல்லும் பொருட்டு. தோல் மற்றும் பிற உறுப்புகளுக்கும் செல்ல ஆரம்பிக்கும்.
அதனால் செரிமான பிரச்னையும��, உடலில் படபடப்பும் ஏற்படலாம். இந்த நொதிகள் அதிகம் சுரக்கும் நேரமும், வயிற்று பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும் நேரமும் உணவு செரிமானம் நடைபெறும் சமயத்தில் நிகழ்கிறது.
0 notes
நிலச்சரிவு என்பது என்ன? நிலச்சரிவுக்கான காரணங்கள்?
இயற்கை அல்லது மனிதச் செயல்களின் விளைவாக மண் மற்றும் பாறைப் பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி வருவதே நிலச்சரிவு எனப்படுகிறது.
பொதுவாக நிலச்சரிவு என்பது பெரும் புயல், காற்று, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் ஆகியவைகளின் விளைவாக ஏற்படுவதாக கருதப்படுகிறது.
வெள்ளம், புயல் நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளைப் போல நிலச்சரிவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் நிலச்சரிவு பொதுவாக மலைப்பகுதிகளிலேயே ஏற்படுகிறது. எனவே மனித சமுதாயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவ தில்லை.
0 notes
படத்தை மிஞ்சும் நிஜம்... பதற வைக்கும் நிலச்சரி வீடியோ !
இந்த நிலச்சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. நிலச்சரிவு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக சுரங்கத்தின் மேலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனிடையே, சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி காணொளிகள் வெளியாகி இருக்கின்றன.
0 notes
வணங்கான் பட சர்ச்சையில் சிக்கிய நடிகை பேட்டி !
இப்படம் வெளியீடுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தில் நடித்த பைஜூ சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் இயக்குனர் பாலா படப்பிடிப்புத் தளத்தில் கடுமையாக நடந்து கொண்டதாக கூறிய காட்சிகள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், மமிதாவை இயக்குனர் பாலா தாக்கியதாக சர்ச்சை ஏற்படவே, நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும், தான் விலகியதற்கு இயக்குனர் காரணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
0 notes