Tumgik
#கோல்டு
dinavaasal · 1 year
Text
0 notes
todaytamilnews · 1 year
Text
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: துபாயிலிருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார் | Arudra Gold Financial Institution Fraud Case
சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 2 months
Text
#திரையரங்க_உணவுகள்
திரைப் படமும் தீனியும் நம் தமிழர்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட உண(ர்)வாகும். இன்று தியேட்டர்களில் கோக், பெப்ஸி பானங்களுடன், பிரட் சாண்ட்விச் & பர்கர் வகைகள், விதவிதமான கேக்குகள் & டோனட், சிக்கன் நக்கெட், பாப்கார்ன் பக்கெட் என்று பல ஜங்க்ஃபுட் உணவுகளே கிடைக்கின்றன!
அப்படியே உங்கள் கண் முன் கொசுவர்த்திச் சுருளை சுழலவிட்டு அல்லது காலயந்திரத்தில் ஏற்றி அந்த ப்ளாஷ் பேக் காலத்திற்கு அழைத்துச் செல்லவே இப்பதிவு! எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் தியேட்டரில் பார்த்த தின்பண்டங்கள் தட்டுவடை, முறுக்கு, தேங்காய் பர்பி தான்! இவை மூன்றும் மும்மூர்த்திகள்!
தியேட்டர்களில் வெளிவரும் படங்கள் மாறலாம்! ஆனால் இந்த மும்மூர்த்திகள் இல்லாத தியேட்டர்களே அன்று கிடையாது! தட்டையும் முறுக்கும் ��ரு CDக்கு ஒரு சுற்று குறைவான சைஸில் கிடைக்கும்! அந்த தோற்றமே ஆச்சரியப்படுத்தும்! ஏனெனில் அன்று பெட்டிக்கடைகளில் பாட்டில்களில் போட்டு மூடி தான்..
தின்பண்டங்கள் விற்பார்கள்! ஆகவே கைவிட்டு எடுக்க வசதியாய் சிறிய வளையல் சைசில் தான் இவை கிடைக்கும்! அப்படிப் பார்த்த முறுக்கும் தட்டையும் தியேட்டர்களில் விஸ்வரூபமாக காட்சிதர வியந்து போய் பார்த்து வாங்குவோம்! தேங்காய் பர்பி ஒரு க்யூப்பின் மினியேச்சர் சைசில் நிச்சயம் 50 கிராம் இருக்கும்!
தட்டையின் மேனியில் முழு நிலக் கடலைகள் கடலை பருப்புகள் பருவப் பெண்ணின் முகப் பருபோல தென்படும்! இவை பற்களில் அரைபடும்போது அவ்வளவு ருசியாக இருக்கும்! 3 சுற்று இருக்கும் கை முறுக்கை ஆட்காட்டி விரலில் மகாவிஷ்ணு சக்கரம் போல சொருகிக் கொண்டு அதன் ஒவ்வொரு சுற்றாக கடித்து தின்னும்..
சுகமிருக்கே! ஆஹா! தேங்காய் பர்பி இன்னுமொரு அற்புதம் சர்க்கரையும் தேங்காயும் சேர்ந்த கலவை தான் தேங்காய் துருவல்களும் சில நேரம் சின்ன துணுக்காக தேங்காயும் நாவில் தட்டுப்படும்! அன்றைக்கு தியேட்டர்களில் கோலி சோடா & கலர் சோடா, பன்னீர் சோடாக்கள் தான் கிடைக்கும்! இவையனைத்தும்,
பீச்சில் சுண்டல் விற்பது போல கையில் ஒரு பெரிய அலுமினிய டிரேவில் அடுக்கி தியேட்டருக்குள் கொண்டுவந்து விற்பார்கள்! சோடாவுக்கு ஒரு க்ரேடு இருக்கும்! அதையும் தூக்கி வருவார்கள் அன்று இந்த தின்பண்டங்களுக்கு தனியாக கேண்டீன் கிடையாது! 70களின் மத்தியில் தம்ஸ் அப், டபுள் செவன், கோல்டு ஸ்பாட்..
போன்றவை அறிமுகமாகி தியேட்டர்களையும் ஆக்ரமித்தன! பாப்பின்ஸ், எக்லேர்ஸ் போன்ற சாக்லெட்டுகள், போலோ போல நடுவில் துளையுள்ள சூடம் மிட்டாய்கள் போன்றவையும் வர கேண்டீன் துவங்கப்பட்டது! குளிர்பானங்களுக்கான டாப் ஓபன் பிரிட்ஜ் பெட்டியையே நாங்கள் சினிமா போல பார்த்தோம்!
அதன் கதவை திறந்து வியர்த்த உடலுடன் இருக்கும் கோல்டு ஸ்பாட்டை ரசித்து குடித்துவிட்டு அந்த பாட்டில்களை கன்னத்தில் வைத்துக் கொள்வது எங்கள் சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்று! அன்று ஏசி திரையரங்குகள் இல்லை! ஏசி தியேட்டர்கள் ஆரம்பித்த பின்னரே தியேட்டரில் ஸ்வீட்கடை போல தனியாக..
கேண்டீன்கள் துவக்கப்பட்டன! 80களின் துவக்கத்தில் இங்கே ஜம்மென்று வந்து அமர்ந்து கொண்டது முட்டை போண்டாவும் கோன் ஐஸ்க்ரீமும்! படத்துக்காக இல்லாமல் இதை சாப்பிடவாவது தியேட்டருக்கு போகணும் என்று ஏங்கியோர் பல! அதிலும் கோன் ஐஸ் மிசினில் ஒரு கைப்பிடி போல இருக்கும்!
அதை மேலே தூக்கியதும் அருவி போல ஐஸ்க்ரீம் வெளியேற அதை அழகாக கோனில் பிடித்து தருவார்கள்! வெனிலா ஒன்று தான் ஃப்ளேவர்! அதுவே அன்று பலருக்கு ஃபேவர்! சிலரெல்லாம் காசு சேர்த்துக் கொண்டுவந்து 2 கோன் ஐஸ்களை வாங்குவார்கள் அதைப் பார்த்தால் நமக்கு அந்த ஐஸ்க்ரீம் மிஷினிலிருந்து..
அந்த ஐஸ்க்ரீம் வெளியே வருவது போலவே பொறாமை பொங்கும்! ஐஸ்க்ரீம் குளுமையான அனுபவம் எனில்.. முட்டை போண்டா ரசனையான அனுபவம்! தங்கம் போன்ற மஞ்சளில் தகதகக்கும்! உள்ளே அவித்த முழு முட்டை! இதை வாங்கியதும் கடித்தால் வாய் வெந்துவிடும் அந்தளவு சூடாக கிடைக்கும்! போண்டாவையும்..
முட்டையையும் தனியாக பிரிந்து அதை ஊதி ஊதி ரசனையாக தின்பதை இன்றும் நினைத்தாலே ருசிக்கிறது! முதலில் முழு முட்டை பிறகு பாதி முட்டை என்று உருமாறியது! முட்டை போண்டாவுக்காகவே சில தியேட்டர்கள் புகழ் பெற்றிருந்தன! அதன் பின்னர் 80களின் மத்தியில் பாப்கார்ன் வந்தது! 90களில்..
பெப்ஸி & கோக் அறிமுகமாகும் வரை இதுவே தலையாய தியேட்டர் தின்பண்டங்களாக இருந்தன! விருதுநகர், சிவகாசி பக்கமெல்லாம் இஞ்சிமரப்பா, தேன் மிட்டாய், மிக்ஸர் போன்றவை கிடைக்கும்! சில தியேட்டர்களில் பப்சும் கிடைத்தன! மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் படம் பார்க்கப் போனால்..
ஒரு முட்டை போண்டாவை ருசித்துவிட்டு, அந்த மசாலா பாப்கார்ன் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டு ஜில்லுனு ஒரு பன்னீர் சோடாவுடன் திரையரங்குக்குள் நுழைவது ஜேம்ஸ்பாண்ட் தனது அழகிய காதலிகளை முத்தமிடுவற்கு இணையான சுகமாகும் இதை அனுபவிக்காத மதுரைவாசிகளே இருக்க முடியாது!
காலமாற்றத்தில் இன்று எல்லாம் மாறிவிட்டது! அன்றொரு நாள் ஐநாக்சில் தம்பி குடும்பத்தோடு சென்ற போது! க்ரில்டு சிக்கன், சாண்ட்விச், பர்கர், கோக் என வாங்கி இறுதியாக 5லிட்டர் பெயிண்ட் டப்பா சைசில் பாப்கார்ன் வாங்கினார்கள்! உனக்குடா என்றான் தம்பி.. தேங்காய் பர்பி கிடைக்குமாப்பா என்றேன்…
கிடைக்குமா…
{ இதில் நான் சொல்லாமல் விட்டதை நீங்களும் கமெண்ட்டில் சொல்லலாம்)
Tumblr media
0 notes
apsarathygp · 7 months
Text
"Old Gold Buying & New Gold Selling Company also Provide Gold Loan(Pludging & Repludging or Retrieve) that is(பழைய தங்கத்தை வாங்குவது புது தங்க காயின்/கட்டி பிஸ்கட் பிஸ்கட்டை விற்பது. ஏற்கனவே நகையை வைத்து மூக்க முடியாமல் கஷ்டப்பட்டால் மூட்டு கொடுப்பது. அதை விற்பது/ மறுபடியும் அடமான வைப்பது. இதை அனைத்தும் செய்து கொடுக்கிறோம். எங்களுடைய "ட்ரூ வேல்யூ கோல்டு மேனேஜ்மென்ட் சர்வீசஸ்") "TRUEVALUE Gold House" @8072103582
Our YouTube Channel:- Pls Subscribe & Click Bell Button:-
https://www.youtube.com/@pgmlife
0 notes
ethanthi · 9 months
Text
வடிவேல் பாணியில்... நகைகளை திருடி கடையை துவங்கிய திருடன் !
சென்னை, நம்மாழ்வார் பேட்டையில், ஒத்தவாடை என்ற தெருவில் சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இதை ரஞ்சித்குமார் மற்றும் அவரின் சகோதரர்கள் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.
0 notes
topskynews · 1 year
Text
ஆருத்ரா கோல்டு நிறுவன விவகாரத்தில் ரூ.1,000 கோடி மோசடி? - காஞ்சி, சென்னையில் 2 முகவர்கள் கைது | Rs.1,000 Crore Fraud on Arudra Gold Company Issue? - 2 Agents Arrested on Kanchi, Chennai
காஞ்சிபுரம் / சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முக்கிய முகவர்கள் 2 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்னை, அமைந்தக்கரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ஆருத்ரா. இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டித் தருவதாக கூறி ஆசைகாட்டி சுமார் ஆயிரம் கோட்டிக்கு மேல் நிதி திரட்டியது. ஆனால் வட்டியும், முதலும் முறையாக தரவில்லை. இதனால்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
நிதிநிறுவன மோசடி குறித்து விசாரிக்க 30 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீத முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களி டம் இருந்து சுமார் 2438 கோடி முதலீடு பெற்றுள்ளது. மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு,…
View On WordPress
0 notes
social-vifree · 2 years
Text
மக்கள் விரும்பும் மண்ணின் சுவை சமையலுக்கு! காளீஸ்வரி கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்! | the Cardia Advanced Cold Pressed gingelly oil Introduced by Kaleesuwari
மக்கள் விரும்பும் மண்ணின் சுவை சமையலுக்கு! காளீஸ்வரி கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்! | the Cardia Advanced Cold Pressed gingelly oil Introduced by Kaleesuwari
Partner Content oi-Rajkumar R Updated: Sunday, April 17, 2022, 11:37 [IST] சென்னை: கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய் மூலம் சமைக்கப்படும் உணவுகள் சுவையானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையாகவும், இயற்கை நறுமணம் மூலம் நிரப்பி உங்கள் விருப்பமான உணவைக் கூடுதல் சிறப்பை பெற வைக்கிறது. எண்ணெய் தயாரிப்பில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் காளீஸ்வரி நிறுவனம் பாரம்பரியமான முறையில் கார்டியா அட்வான்ஸ் கோல்டு…
Tumblr media
View On WordPress
0 notes
trendingnewsto · 2 years
Text
நயன்தாராவின் கோல்டு ரிலீஸ் தாமதம் ஏன்?
நயன்தாராவின் கோல்டு ரிலீஸ் தாமதம் ஏன்?
‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் 7 வருடத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘கோல்ட்’. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்துள்ளனர். இந்தப் படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் இதன் ரிலீஸ் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வாரம்…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
CWG 2022: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர்
CWG 2022: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர்
இந்தியாவின் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 21-15 மற்றும் 21-13 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வென்டி ஜோடியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இவர்கள் இருவரும் கடந்த கோல்டு கோஸ்டில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தாமஸ் கோப்பையை வென்ற இந்திய…
Tumblr media
View On WordPress
0 notes
bestchoiceintn · 2 years
Text
அடகு வைத்த நகையை மீட்டு விற்க சென்னை
அடகு வைத்த நகையை மீட்டு விற்க சென்னை
சென்னை அடகு/ஏல நகை மீட்டு அதிக விலைக்கு விற்க அணுகவும். தமிழ்நாடு முழுவதும். விபரங்களுக்கு தொடர்பு கொள்ள – 9894783380, WhatsApp – 9894783380 Gold Rate Chennai தங்க ���கை விற்க மற்றும் அடகு நகை மீட்டு விற்க, அன்றைய மார்க்கெட் விலையை பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்..   அடகு வைத்த நகையை மீட்க பாலாஜி கோல்டு சென்னை தொடர்புக்கு 9894783380 தங்கம் விற்க! அடகு நகையை மீட்டு விற்க!!   அடகு நகைகளை மீட்டு நல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 5 months
Text
“திண்டுக்கல் சிவா பிரியாணி”
அதிக பட்சம் மொத்தமே 10 கிலோ மீட்டர் சுற்றளவே இருக்கும் திண்டுக்கல் மாநகரில் தான் எத்தனை எத்தனை பிரியாணிக் கடைகள்! உலகிற்கே தெரிந்த தலப்பாகட்டி, வேணு, பொன்ராம் மட்டுமின்றி பங்காரு, துளசி, SKM, பிஸ்மி, நிலா, அன்பு, வேலு, ரஹ்மான்,வேங்கட விலாஸ், அராஃபத்.. என்னங்க இத்தனை கடைகள் இருக்கான்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன். இந்தப் பதிவில் திண்டுக்கல் சிவா பிரியாணியைப் பற்றி தான் “ஜொள்ளலாம்”னு இருக்கேன்! வாங்க என் கூட..
சிவா பிரியாணியை ருசிக்கும் முன்பு இதான் பிரியாணின்னு நம்ப்பி சாப்பிடும் அப்பாவி சென்னையர்களைப் பற்றி பார்ப்பது இந்தப் பதிவுக்கு மிக மிக அவசியம்! வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறதோ அதைவிட ஒரு 3 மடங்கு அதிகம் பிரியாணி கடைகள் சென்னையில் இருக்கும் எனலாம். நீங்கள் எங்காவது தடுக்கி விழுந்தால் கூட பிரியாணி அண்டாவுக்குள் தான் விழுவீர்கள்! இத்தனை ஆயிரம் பிரியாணி கடைகளில் பேர் சொல்லும்படி இருக்கும் பிரியாணிக் கடைகளை விரல் விட்டு எண்ண நமக்கு..
ஒரே ஒரு கையே போதும்! சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறா மாதிரி யாரோ பாஸ்மதி அரிசியில் செஞ்சாதான் அது பிரியாணின்னு சென்னை மக்களை பூரா நம்ப வச்சிருக்கானுங்க! கோவையில் 10 ரூபா நாணயம் மாதிரி சென்னையில் சீரக சம்பா பிரியாணியை சீந்த ஆளிருக்காது! 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் குழையாமல், விறைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி போல விறைத்த பாஸ்மதி அரிசியில் காவி நிறச் சோறு, தன்னுடன் சேர்த்த மசாலாவை..
விவாகரத்து செய்து விட்ட சிக்கன் மட்டன் இறைச்சி துண்டுகள், (பல இடங்களில் சரியாக வேகாமல் MRF டயர் துண்டங்கள் போல இருக்கும்) கீழடி ஆராய்ச்சியாளர்கள் வந்து பச்சடியில் தயிரைத் தேடும்படி தயிர் வெங்காயம், சேம் புளி, சேம் கத்திரிக்காய் போட்ட சேம் டைலர் கத்திரி புளிக் கூட்டு இதுதாங்க பெரும்பான்மையான சென்னை பிரியாணிகளுக்கு அடையாளம்! உலகில் அறுகி வரும் உயிரினங்களைப் பார்ப்பது போல சென்னையில் நல்ல பிரியாணி அவ்வளவு சீக்கிரம் உண்பதற்கு கிடைக்காது!
அம்மாம் பெரிய சென்னையில் கிடைக்காத அந்த அற்புதமான சீரகச்சம்பா பிரியாணி தான் திண்டுக்கல்லில் தரமாக, விதவிதமாக தனித்த ருசியில் கிடைக்கிறது! இப்போ யோசிச்சு பாருங்க சென்னையின் பரப்பளவில் 8இல் ஒரு மடங்கு கூட இல்லாத திண்டுக்கல் நகரில் தடுக்கி விழுந்தாலும் தரமான பிரியாணி கடையில் தான் விழுவீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி! அதென்னவோ நெல்லைக்கு அல்வா போல திண்டுக்கல்லிற்கு பிரியாணி! கோஹ்லி வீட்டுக் கோழியும் செஞ்சுரி போடும் என்னும்..
புதுமொழிக்கு ஏற்ப ஒவ்வொருவரு பிரியாணிக் கடையும் ஒரு தயாரிப்பு ஃபார்முலாவை ரகசியமாக வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார்கள். அவ்வகையில் திண்டுக்கல் நகரின் டாப் 3 பிரியாணி கடைகளின் இடத்தில் சிவா பிரியாணிக்கு ஓரிடம் தரலாம்! சிவா பிரியாணியின் சீக்ரெட் அவர்கள் மசாலா ஃபார்முலாவில் மட்டுமல்ல அவர்கள் சேர்க்கும் நெய்யில் இருக்கிறது. ரோஸ் கோல்டு கலரில் வெந்த அரிசி, ரோஜாப் பூ போல வெந்த கறி, நெய்யின் நறுமணம், மசாலாவின் ருசி, பிரியாணியின் சூடு இவை..
அனைத்தும் ஒன்றாக இலையில் பிரியாணியாக உருமாறி இருக்கும்! பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களின் ருசி நாவில் தெரிந்தாலும், இறைவனைப் போல அதில் ஒரு துண்டு கூட பிரியாணியில் தென்படாது! அந்தளவிற்கு அரைத்து சேர்த்து இருப்பார்கள்! காதலியின் சிணுங்கல் போல மிக மிக மெல்லிய காரம் உங்கள் கன்னக் கதுப்புகளில் பரவும் சுகமான அவஸ்தையை இங்கு நன்கு உணரமுடியும்! அற்புதமான பருப்பு & எலும்பு தால்ஸா, சரிசமமான இட ஒதுக்கீட்டில் தயிர் வெங்காயம்,
பிரியாணியில் இருக்கும் கறி கண்ணடித்தாலே காதலில் விழுபவர்களைப் போல கைகளால் தொட்டதுமே பூப்போல மலர்ந்து பிரியும்! இறைச்சியின் உட்புறம் ரோஜா நிறம் தெரியும்! இவை அனைத்தும் நீங்கள் சிவா பிரியாணியை சாப்பிடும் அனுபவத்தை பல நாட்கள் உங்கள் நினைவில் நிலை நிறுத்தும்! மட்டன் சுக்கா அடுத்த அற்புதம்! அதன் மென்மைக்கு பஞ்சு, ஸ்பாஞ்ச் போன்றவற்றை உதாரணமாகச் சொன்னால்கூட அது அவ்வளவு பொருத்தமாக இருக்காது! அளவான மசாலா, காரம் சேர்த்து அவ்வளவு..
பக்குவமாக சமைத்த இறைச்சி! பிரியாணி அல்லாது வெள்ளைச் சோறு வாங்கினால் மட்டன் சுக்கா வாங்க மறக்காதீர்கள்! நான் அதை சோறு மற்றும் ரசத்தோடு உண்டதில் நவரசமும் தெரிந்தது! இங்கெல்லாம் சென்னையர்கள் சாப்பிட்டால் ஓ சீரகச் சம்பாவில் இப்படியும் பிரியாணி சமைக்கலாமா அது இவ்வளவு ருசியா என்று வியந்து போவார்கள்! அடடா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது கூட ஓகே.. நாம இங்க இலுப்பையையே சர்க்கரையா நினைச்சிட்டு இருந்திருக்கோம்னு தங்களது ஞானக்..
கண்களை படாரெனத் திறப்பார்கள்!ஆஸ்திரேலியா டீம் அதிக உலகக்கோப்பைகளை ஜெயித்தது போல பிரியாணி என்றால் திண்டுக்கல் தான் அதிகம் ஜெயிக்கிறது! எனக்கு இது போல தமிழ் நாட்டின் பிரபலமான உணவுக் கடைகளில் பல யுனிக் உணவுகள் ஏன் இன்னும் சென்னைக்கு வந்து தங்களது கடைகளின் கிளைகளைப் போடவில்லை என்ற கேள்வி எழுந்தது! பிரியாணி அரிசியில் சென்னையர்களின் சீரகச்சம்பா புறக்கணிப்பை விட்டுவிடுங்கள் திண்டுக்கல் வாசி ஒருவர் இதை மிக அற்புதமாகச் சொன்னார்..
“அதென்னமோங்க நம்ம ஊரு உணவு நம்ம ஊர் எல்லையை விட்டுத் தாண்டினா அந்த ருசி இங்கே மாதிரி அங்கே வராதுங்க” என்றார்! உண்மை தான் குலதெய்வங்கள் என்றென்றும் எல்லை தாண்டாமல் நம் ஊர்களில் அல்லவா வீற்று இருக்கும்!
Tumblr media
0 notes
topskynews · 1 year
Text
1 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி: ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு | 5 executives of Aarudhra Gold announced as wanted criminals
சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்த விவகாரத்தில், ஆருத்ராகோல்டு நிறுவனர் உள்ளிட்ட 5 நிர்வாகிகளை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ராகோல்டு டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
ஆருத்ரா மோசடி வழக்கு : நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு நோட்டீஸ்..
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த  ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2,438 கோடி  மோசடி செய்ததாக புகார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தை அடுத்து,  அதனை நம்பி  லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.…
Tumblr media
View On WordPress
0 notes
trendingnewsto · 2 years
Text
ஒரு வாரம் தாமதமாக வெளியாகும் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ | Due to work delay on our side Gold will be releasing one week after Onam says Alphonse Puthren
ஒரு வாரம் தாமதமாக வெளியாகும் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ | Due to work delay on our side Gold will be releasing one week after Onam says Alphonse Puthren
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். ‘பிரேமம்’ வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த ��ல்போன்ஸ் புத்திரன்…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
CWG 2022: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர்
CWG 2022: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர்
இந்தியாவின் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 21-15 மற்றும் 21-13 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வென்டி ஜோடியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இவர்கள் இருவரும் கடந்த கோல்டு கோஸ்டில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தாமஸ் கோப்பையை வென்ற இந்திய…
Tumblr media
View On WordPress
0 notes