Vinayagar Slogam - கணபதி ஸ்லோகம் - The Tamil Hindu Festivals
0 notes
உதயகாலஸ்லோகம் ! நாம் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் துயிலெழுந்ததும், நம் மனதில் வரும் முதல் நினைவு நல்லதாக இருந்தால், அன்று நாள் முழுவதும் நன்மையே நடக்கும். முற்காலத்தில், அதிகாலையில் எழுந்து நீராடி, இந்த அருமையான துதியைச் சொல்லியவாறே அன்றைய வேலைகளைத் துவங்குவார்கள். அதனாலேயே இந்த துதிக்கு 'உதயகால ஸ்லோகம்' என்று பெயர். நாமும், விடிகாலையில் துயிலெழுந்து, நீராடி, நம் பாரத புண்ணிய பூமியின் தெய்வங்களையும், மகான் களையும், கற்புக்கரசிகளையும் ரிஷிகளையும் தியானிக்கும் அற்புதமான இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நம் பாவங்கள் தொலையும். மனமும், நினைவுகளும் புனிதமடையும். சொல்லொணா ஆற்றல் பிறந்து நம் காரியங்களும் வெற்றியடையும். தூய்மையான உணர்வுகளால் சகல பாக்கியங்களும் நம்மைத் தேடி வரும். இதைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டேபின் இதைச் சொல்லிக் கொண்டே வேலைகளையும் செய்யலாம். 1. ஆதி கணபதி ஆறுமுகரை அம்பிகை மணவாளரை கால பைரவர் நந்திகேஸ்வரர் வீரபத்ர தக்ஷிணாமூர்த்தியை தியானித் தெழுந்தேன் 2. சேஷகிரிவளர் வேங்கடேசரை திருமகள் அலமேலுவை தேவி சரஸ்வதி சதுர்முகப் ப்ரும்மா ஸ்ரீ பூமி தேவியம்மனை 3. ப்ராணதாரமாக விளங்கிடும் பரிபூர்ண காவேரியம்மனை ஆதிகங்கையை அறுபத்தாறு கோடி அகிலபுவனத்தின் தீர்த்தத்தை 4. மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்ம வாமனாவதார மூர்த்தியை வீரபரசுராம பலபத்திர ஸ்ரீ ராம க்ருஷ்ண பெளத்தரை, 5. ஸ்ரீ ஹரி திருமார்பில் விளங்கிடும் ஸ்ரீ துளசி மஹாதேவியை ஜனகன் திருமகள் ப்ராண நாதரை ஸ்ரீ பரத லக்ஷ்மண சத்ருக்கனரை 6. ஆதிசக்தியை லக்ஷ்மி சரஸ்வதி ஸாவித்ரி காயத்ரியம்மனை அகலிகை,த்ரௌபதை சீதை தாரை மண்டோதரி ஐந்து பேர்களை 7. தேவகி குந்தி சுபத்திரை ருக்மிணி சப்த ரிஷிகளின் தேவியை தசரதர் தேவி கௌசல்யையுடன் சிறந்த உத்தமிமார்களை, 8. அயிராணியுடன் ஸுர கன்னிகளை ஐராவதம் உச்சை சிரவம் அருமையாகிய காமதேனுவை அடர்ந்த கற்பகச் சோலையை 9. அஷ்டதிக்குபாலர் அவர்கள் தேவியை அஷ்டவஸு அஷ்டகஜங்களை சித்தர் கின்னரர் கிம்புருடரை சிறந்த வித்யாதரர்களை 10. வசிஷ்டர் வாமதேவர் காச்யபர் அகஸ்தியர் அத்ரி ஆங்கீரஸை புலஸ்தியர் கிரது புலகர் முதலான தவசிலாக்ய மகான்களை 11. வேதவியாஸரை மார்கண்டேயரை வீணாகான நாரதரை சூதர் சௌனகர் துர்வாஸமுனி ஜடபரதர் ஜரத் காருவை 12. மதங்கமாமுனி ரிச்ய ஸ்ருங்கரை மகரிஷி சரபங்கரை பிருகு மகாமுனி கௌதமரிஷி பேர் பெற்ற விஸ்வாமித்ரரை 13. ஸனகாதிகளை ஜனகராஜரை சுகருடன் சதானந்தரை வைஸம்பாயனர் கமந்து ஜைமனி பைலவர் ஜாபாலியை 14. கபிலரிஷியுடன் தத்தாத்ரேயரை கர்கி பாரத் வாஜரை ஹயக்ரீவரை ப https://www.instagram.com/p/CohrRinyYqo/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Vinayagar Slogam - கணபதி ஸ்லோகம்
1 note
·
View note