இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!
இளையராஜாவின் மகளும், பிரபல திரையிசை பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று (ஜன. 25) மாலை உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.
இசைஞானியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான
இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி.
இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்
சிறு வயதிலேயே இசைத்துறைக்குள்
காலடி வைத்துவிட்ட பவதாரணி,
பின்னணி பாடகி, இசையமைப்பாளர்,
கவிஞர் என பன்முகத்திறமை
கொண்டவராக விளங்கினார்.
இவருடைய…
View On WordPress
0 notes
பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது.
வரும் வாரத்தில்,
நிப்டி 22000 புள்ளிகளை கடந்து
வரலாற்று உச்சத்தை…
View On WordPress
0 notes
திண்ணை: ஆளுங்கட்சி 'கடாரம் கொண்டான்' - சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?
”அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,” என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.
”என்ன பேனாக்காரரே…
வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு…?”
என கேட்டபடியே, சூடான தேநீரை
எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி.
”அது ஒண்ணுமில்ல…
ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி,
மாங்கனி மாவட்டத்துல
ஆளுங்கட்சியைச் சேர்ந்த
மூத்த நிர்வாகியான…
View On WordPress
0 notes
பாஸ்போர்ட் மட்டும் போதும்... இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!
இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட்…
View On WordPress
0 notes
சர்வோதய சங்க ஊழல் விவகாரம்: அதிகாரிகளுக்கு 'கில்மா' மேட்டர்களை சப்ளை செய்தது அம்பலம்!
சர்வோதய சங்கத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, கேவிஐசி துறை அதிகாரிகளுக்கு மது, மாது இத்யாதிகளை சப்ளை செய்து கவிழ்த்த விவகாரம் சிபிஐ விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கோவை மாவட்டம் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில், குப்புசாமி லேஅவுட்டில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 28 கிளைகள் உள்ளன.
காந்தியக் கொள்கையான கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் சர்வோதய…
View On WordPress
0 notes
'வாய்தா ராணி', 'ஓசி பயணம்...' வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர்.
தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி…
View On WordPress
0 notes
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் மூத்தத் தலைவர்களில்
ஒருவரான க.பொன்முடி,
தற்போது தமிழக…
View On WordPress
0 notes
சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது.
கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி,…
View On WordPress
0 notes
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்...?
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர்.
”சொல்லுங்களேன்…கேட்போம்” – இது நக்கல் நல்லசாமி.
”அறிவுக்கோயில் தலைவரு
போன பிப்ரவரி மாசம் சேலத்துல
அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன்
ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா…?,”
”ஓ… நல்லா ஞாபகம் இருக்கு.
கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு,
கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு…
View On WordPress
0 notes
திண்ணை: ''எதையும் நியாயமாதான் செய்வோம்...!'' பெரியார் பல்கலையில் அக்கப்போர்!
”தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,” என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர்.
காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி.
”பெரியார் பல்கலையில்
முருகக்கடவுள் பேர் கொண்ட
அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி
சில புத்தகங்களை தொகுத்து
வெளியிட்டு…
View On WordPress
0 notes
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! - கோ.விசுவநாதன்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது.
தனிநபர் வருமானம்
15 ஆயிரம் டாலர்கள் உள்ள
நாடுகளை வளர்ந்த நாடுகள்
என்று அழைக்கிறோம். மீதமுள்ள
நாடுகளை வளரும் நாடுகள்,
வளர்ச்சி பெறாத நாடுகள் என்று
இரு…
View On WordPress
0 notes
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
வர்த்தக நேர முடிவில்
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி 418 புள்ளிகள் (2.07%)…
View On WordPress
0 notes
ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில்
ஸ்விக்கி நிறுவனத்துக்கு அதிகளவில்
ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவு வகைகளில்
பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த நிறுவனமே கண்டு வியக்கும் அளவுக்கு
12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்
குவிந்துவிட்டதாக கூறுகிறது.
அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில்
கோப்பையை வென்றது உண்மையில்
பிரியாணிதான் என்றும் அந்த நிறுவனம்
பகடியாக கூறியுள்ளது.
உணவு டெலிவரி வர்த்தகத்தில்
முன்னணியில் உள்ள…
View On WordPress
0 notes
குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் 'நேர்மையான' திருட்டு!!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்றும் (பிப். 25), நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுகிறார். பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது.
முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக,
நாம் தமிழர், தேமுதிக கட்சிகளும்
களத்தில் சுழன்றடிக்கின்றன.
மாற்று அரசியலை முன்னெடுக்கும்
பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான்
போன்றோர்,…
View On WordPress
0 notes
இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூ�� ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
‘அம்மையார் இந்திரா காலில்
விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?’
என்று தலைப்பிட்டு ஒரு காணொலி
பரவி வருகிறது. அந்தக் காணொலியில்,
வயதான ஒரு…
View On WordPress
0 notes
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.
ஆடி மற்றும் மார்கழி மாதங்களில்
திருமணம், புதுமனை புகுதல்,
புதிய வணிகம் உள்ளிட்ட
புதிய தொடக்கங்களை
சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை.
புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத
மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.
இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல)
பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள்,
கற்பிதங்கள் விரவிக்…
View On WordPress
0 notes
ஒரே நாடு ஒரே மொழி... ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:
வெட்கக்கேடு
திட்டினார்
துரோகம்…
View On WordPress
0 notes