(via உப்பு நாய்கள்)
0 notes
About Poompugar
Poompugar was founded in December, 2013 as an online bookstore to sell Tamil books exclusively. In January 2014, we opened a physical bookstore at Karaikudi. We have curated Tamil books in a variety of categories including literature, politics, science, art, history, children books, health etc. We conduct regular literary events, film screenings, book reviews, author meet and various other events…
View On WordPress
1 note
·
View note
தோற்றப் பிழை "தோற்றப் பிழை" சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி "ஐயனார் கோயில் குதிரை வீரன்" ஆகும்.
0 notes
உப்பு நாய்கள் இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்குமி சரவணகுமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.
0 notes
ஞாயிறு கடை உண்டு சமகால தஞ்சாவூர் நகரத்தில் பின்புலத்தில் விரிவு கொள்ளும் இந்நாவல் அந்நிலத்தின் ஆண்டைகளுக்கு பதிலாக அடித்தள மக்களின் வாழ்வியலை கலாம்சத்துடன் பதிவு செய்திள்ளது பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் முதல் பெரிய பலத்துடன் அதிகாரத்திலிருக்கும் நரேந்திர மோடி வரை யாவரும் நாவலாசிரியர் பார்வையில் கறாரான விமர்சனத்துக்குள்ளாகின்றனர்.
0 notes
குதிப்பி ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல் உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது அப்பேச்சு மொழிக்கு இசைவான நெருக்கமான ஓர் உரைநடை மொழியையே காமுத்துரை நாவல் முழுக்க கைகொண்டிருப்பது வாசிப்பில் சுவையைக் கூட்டுகிறது.
0 notes
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.
0 notes
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.
கதை கரு என்பது வெறுமனே…
View On WordPress
0 notes
தமிழரின் தொன்மை
மண்ணையும் கொடியையும் கொற்றத்தையும் இழந்த தமிழ்ப் பேரினம், திராவிட இனம் எனும் பொய்ப்பெயரில் புதைக்கப்பட்டுக் கிடக்கிறது. அது தன் தலையறுத்து தன் அடையாளத்தையும் இறைமையையும் மீட்டெடுக்க உதவும் ஆற்றல், வரலாறு எனும் அடிப்படை அறிவியலுக்கு உண்டு. மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் திருடப்பட்டும் சிறுமைபடுத்தப்பட்டும் கிடக்கும் தமிழரினத்தின் வரலாற்றை மீட்டெடுக்கும் திருப்பணி ஆங்காங்கே தொடங்கியுள்ளதைக் காணக்…
View On WordPress
0 notes
பெயல் நீர் சாரல்
பெயல்நீர் சாரல்கள்…
இனம் புரியாத படபடப்பு, பல வருடங்கள் பல தருணங்களில் நான் கிறுக்கியதைப் பலர் பாராட்டினாலும், நூல���ய் வெளியிட இதுவரை தோன்றவில்லை.
எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்கின்ற வள்ளுவன் வாக்குப்படி, தமிழ்ச்சான்றோர் கூடியிருக்கத் துணிவுத் துணையாக வந்ததால் என் வாழ்கைப் பாதையில் வழிநெடுக நான் வீசியெறிந்தத் தமிழ்க் கிறுக்கல்கள் உங்கள் கைகளிலே இன்று உலா வருகிறது.
View On WordPress
1 note
·
View note